புதையலாய் இருந்தாலும்
புதைந்து கிடந்தால் தேவையில்லை....
புதைந்து போகாதே
விதையாய் நீ விழு
விடியலாய் முளைத்து வா !!!!
வட்ட பூமி
வாழவா வழியில்லை !!
துவண்டு போகாதே
தோல்விகள் நிலையில்லை....
கரையை தேடாதே
கலங்கரை உள்ளதென
கடலில் கால் வை !!
நமக்கென்று ஓர் திசை
தனியாய் முளைக்கும் ...
உழைப்பை நீ மறந்தால்
பருத்தியும் பாறை தான் ...
கடினமாய் நீ உழைத்தால்
பாறையும் பருத்தி தான் ..
வரலாறு பேசுவதற்காக
வாழ்கையை வரையறுக்காதே!!!
உண்மையாய் நீ வாழு
உன் வாழ்க்கை வரலாறாகும் !!!!
Sunday, October 24, 2010
Sunday, September 19, 2010
அன்பே !
கவனம் சிதறுதே . . . . .
கவலையும் சிதறுதே . . . .
கனவுகள் மட்டும்
கைப்பிடி உறக்கத்தில் . . .
நுனிப்புல் பனித்துளி
எனக்கும் பிடிக்கும் . . .
இனிப்பாய் அவள் சிரித்தால்
அது கூட விண்ணில் பறக்கும் . . .
இரவே வந்தாலும்
இதயங்கள் உறங்குவதில்லை
இறப்பு வரும் வரை . . . .
இறப்பே வந்தாலும்
என் இதயம் உறங்குவதில்லை
அன்பே !
அது உன்னில் உள்ளவரை . . . .!!!!!
கவலையும் சிதறுதே . . . .
கனவுகள் மட்டும்
கைப்பிடி உறக்கத்தில் . . .
நுனிப்புல் பனித்துளி
எனக்கும் பிடிக்கும் . . .
இனிப்பாய் அவள் சிரித்தால்
அது கூட விண்ணில் பறக்கும் . . .
இரவே வந்தாலும்
இதயங்கள் உறங்குவதில்லை
இறப்பு வரும் வரை . . . .
இறப்பே வந்தாலும்
என் இதயம் உறங்குவதில்லை
அன்பே !
அது உன்னில் உள்ளவரை . . . .!!!!!
Tuesday, September 14, 2010
அனாதையின் வாழ்க்கைச் சுழற்சி
பசியை மறக்க
உணர்ச்சியை விற்றேன்
பணமானது . . . .
கொலையே கூடாதென
கலைக்க மறந்தேன்
கருவானது . . . .
உருவம் வந்தவுடன்
உலகில் உதறினேன்
அனாதையானது . . . .
உணர்ச்சியை விற்றேன்
பணமானது . . . .
கொலையே கூடாதென
கலைக்க மறந்தேன்
கருவானது . . . .
உருவம் வந்தவுடன்
உலகில் உதறினேன்
அனாதையானது . . . .
தன்னைப் பற்றி தானே .....
விலை கொடுத்து வாங்க
என்னிடம் ஏதுமில்லை . . . .
அதனால் நானே விலையாகிறேன் . . . .
--விலைமாது
என்னிடம் ஏதுமில்லை . . . .
அதனால் நானே விலையாகிறேன் . . . .
--விலைமாது
Wednesday, September 8, 2010
நண்பா . . . .
என் கண்ணீர்
தொலைந்ததும்
என் கனவுகள்
முளைத்ததும்
உன் கைகோர்த்து
நடக்கும் போது தான்......
தொலைந்ததும்
என் கனவுகள்
முளைத்ததும்
உன் கைகோர்த்து
நடக்கும் போது தான்......
Saturday, May 8, 2010
அம்மா " என்னை நினைபடுத்த "
உன்னை எப்படி எழுத மறந்தேன். . .
"அம்மா"
எவ்வளவு அழகான கவிதை . . .
ஆயிரம் முறை
லட்சம் முறை
கோடி முறை
வாசித்தாலும் சலிக்காத கவிதை . . . .
வயிற்றில் சிலகாலம்
இடுப்பில் சிலகாலம்
நெஞ்சில் சிலகாலம்
என்னக்காகவே போனது
உன் ஆயுட்காலம் . . .
கணிப்பொறிகளோடு வாழ்க்கை
குளுகுளு அறை
விதவிதமான ஆடைகள்
சொகுசு வீடு
இவையெல்லாம்
உன் கருத்ததேகமும்
பெருத்த கால்வெடிப்பும்
கிழிந்த ஆடையும்
போட்ட பிச்சைகள் . . .
நான் ஊனமாய் பிறந்திருந்தாலும்
ஊட்டி வளர்த்திருப்பாய் . .
தானமாய் கேட்டிருந்தால்
உயிரையும் கொடுத்திருப்பாய் . .
உனக்கென்று கொடுக்க
பெரியதாய் பொருள்
எதுவும்
இந்த பூமியில் எனக்கு
தோன்றவில்லை . ...
உன்னை விட
பெரியதாய் ஒன்றும்
இந்த பூமியில்
இன்னும் தோன்றவுமில்லை . . .
அம்மா
உனக்காக ஒரு நாள்
உன்னை நினைவுபடுத்த அல்ல . . .
உனக்காக நானிருக்கிறேன்
என்று நினைவுபடுத்த . . . .
"அம்மா"
எவ்வளவு அழகான கவிதை . . .
ஆயிரம் முறை
லட்சம் முறை
கோடி முறை
வாசித்தாலும் சலிக்காத கவிதை . . . .
வயிற்றில் சிலகாலம்
இடுப்பில் சிலகாலம்
நெஞ்சில் சிலகாலம்
என்னக்காகவே போனது
உன் ஆயுட்காலம் . . .
கணிப்பொறிகளோடு வாழ்க்கை
குளுகுளு அறை
விதவிதமான ஆடைகள்
சொகுசு வீடு
இவையெல்லாம்
உன் கருத்ததேகமும்
பெருத்த கால்வெடிப்பும்
கிழிந்த ஆடையும்
போட்ட பிச்சைகள் . . .
நான் ஊனமாய் பிறந்திருந்தாலும்
ஊட்டி வளர்த்திருப்பாய் . .
தானமாய் கேட்டிருந்தால்
உயிரையும் கொடுத்திருப்பாய் . .
உனக்கென்று கொடுக்க
பெரியதாய் பொருள்
எதுவும்
இந்த பூமியில் எனக்கு
தோன்றவில்லை . ...
உன்னை விட
பெரியதாய் ஒன்றும்
இந்த பூமியில்
இன்னும் தோன்றவுமில்லை . . .
அம்மா
உனக்காக ஒரு நாள்
உன்னை நினைவுபடுத்த அல்ல . . .
உனக்காக நானிருக்கிறேன்
என்று நினைவுபடுத்த . . . .
Monday, April 19, 2010
காதலே நீயும் அப்படித் தான் ....
ரத்தம் வராமல் இரண்டாய்
கிழிந்தது காகிதம் ....
காயங்கள் படாமல்
கீழே விழுந்தது மழைத்துளி ...
வலிக்காமல்
வேகமாய் அடித்தது
காற்று ....
காதலும் இவைகளைப் போலத்தான்
கழுத்தை நெரிக்காமல்
கத்தி குத்தாமல்
ஆயுதம் தாக்காமல்
அழகாய் கொன்றது
அதுவும் ஒரு நொடியில் !!!!!!
கிழிந்தது காகிதம் ....
காயங்கள் படாமல்
கீழே விழுந்தது மழைத்துளி ...
வலிக்காமல்
வேகமாய் அடித்தது
காற்று ....
காதலும் இவைகளைப் போலத்தான்
கழுத்தை நெரிக்காமல்
கத்தி குத்தாமல்
ஆயுதம் தாக்காமல்
அழகாய் கொன்றது
அதுவும் ஒரு நொடியில் !!!!!!
Saturday, April 17, 2010
போராடு !!!!!
சிக்கலில் வாழ்ந்தாலும்
சிரித்து வாழும் சிலந்தி .....
ஒரு நாள் வாழ்ந்தாலும்
உயரம் தேடி பறக்கும்
விட்டில் பூச்சி ....
பூச்சியே போராடும் போது
வெறுமனே உன் மூச்சிருந்து என்ன பயன் ?????
போராடு !!!!!
வெற்றி கைகெட்டும் வரை !!!!
சிரித்து வாழும் சிலந்தி .....
ஒரு நாள் வாழ்ந்தாலும்
உயரம் தேடி பறக்கும்
விட்டில் பூச்சி ....
பூச்சியே போராடும் போது
வெறுமனே உன் மூச்சிருந்து என்ன பயன் ?????
போராடு !!!!!
வெற்றி கைகெட்டும் வரை !!!!
Sunday, April 11, 2010
உன் பார்வை வேண்டி
மழைத்துளி
குடை தாண்டும்
அவள் உடல் தீண்ட . . . .
புல்வெளி
புதையல் சுமக்கும்
அவள் பாதம் தாண்ட . . . .
அடித்தது புயலோ !!!!
அடிக்கடி குழப்பம்
சிரித்தது அவளோ
நெஞ்சில் மின்மினி பறக்கும் . . .
வெயிலோ கறுக்கும்
அவள் விழி பார்த்தால் . . .
விதையோ பூக்கும்
அவள் ஒரு கணம் சிரித்தால் . . .
படித்தது மறந்தது
காரணம் உன் முகம் தெரிந்தது . .
உன் அழகு
படைத்தத்தில் சிறந்தது
படைத்தவன் சொன்னது . . .
உன் அழகை ரசித்தேன்
ஒருகணம் . . .
என் உள்ளம் சிதைகிறது
அனுதினம் . . .
குடை தாண்டும்
அவள் உடல் தீண்ட . . . .
புல்வெளி
புதையல் சுமக்கும்
அவள் பாதம் தாண்ட . . . .
அடித்தது புயலோ !!!!
அடிக்கடி குழப்பம்
சிரித்தது அவளோ
நெஞ்சில் மின்மினி பறக்கும் . . .
வெயிலோ கறுக்கும்
அவள் விழி பார்த்தால் . . .
விதையோ பூக்கும்
அவள் ஒரு கணம் சிரித்தால் . . .
படித்தது மறந்தது
காரணம் உன் முகம் தெரிந்தது . .
உன் அழகு
படைத்தத்தில் சிறந்தது
படைத்தவன் சொன்னது . . .
உன் அழகை ரசித்தேன்
ஒருகணம் . . .
என் உள்ளம் சிதைகிறது
அனுதினம் . . .
" பட்டமளிப்பு விழா "
தொலைத்த நண்பன்
தொந்தரவு ஆசிரியர்
வழியனுப்பிய வகுப்பறை
சோகமாய் காத்திருந்த மரங்கள்
மறுபடி கிடைத்தது அந்த சொர்க்கம்
கட்டியணைத்தான் நண்பன்
கதறாமல் பேசியது கண்ணீர்
வித்தியாசமான ஆடை
சாதனையெல்லாம் பேசிய மேடை
கடைசியில் கை சேர்ந்தது பட்டம் ..
பட்டமும் வாங்கி வந்தோம்
பறக்க விட்டிருந்தால் பறந்திருக்கும்
"பாவம்"
படுத்துறங்கியது என் அலமாரியில்
என் பழைய சான்றிதழ்களோடு ...
தொந்தரவு ஆசிரியர்
வழியனுப்பிய வகுப்பறை
சோகமாய் காத்திருந்த மரங்கள்
மறுபடி கிடைத்தது அந்த சொர்க்கம்
கட்டியணைத்தான் நண்பன்
கதறாமல் பேசியது கண்ணீர்
வித்தியாசமான ஆடை
சாதனையெல்லாம் பேசிய மேடை
கடைசியில் கை சேர்ந்தது பட்டம் ..
பட்டமும் வாங்கி வந்தோம்
பறக்க விட்டிருந்தால் பறந்திருக்கும்
"பாவம்"
படுத்துறங்கியது என் அலமாரியில்
என் பழைய சான்றிதழ்களோடு ...
Tuesday, April 6, 2010
"தன்னம்பிக்கை"
" இழப்பதற்கு எங்களிடம் எதுவுமில்லை
தன்னம்பிக்கையைத் தவிர "
மனிதனால் சின்னபின்னமான
தன் கூட்டோடு
அடுத்த மரம் தேடும்
சிட்டுக்குருவிகள் "
Monday, April 5, 2010
" வேலை"
தேடிப்பார்த்தேன்
கிடைக்கவில்லை
கிடைக்காது என தெரிந்தும்
தேடிப்பார்த்தேன்
கிடைத்தது வேலை அல்ல
" யோசனை "
மனதிலிருந்த சுமைகளை
முதுகிற்கு மாற்றினேன்
நான் இப்போது
"மூட்டை தூக்கும் தொழிலாளி "
கிடைக்கவில்லை
கிடைக்காது என தெரிந்தும்
தேடிப்பார்த்தேன்
கிடைத்தது வேலை அல்ல
" யோசனை "
மனதிலிருந்த சுமைகளை
முதுகிற்கு மாற்றினேன்
நான் இப்போது
"மூட்டை தூக்கும் தொழிலாளி "
Sunday, April 4, 2010
"அந்த சிவப்புச் சட்டை "
நான் இதுவரை காரை இவ்வளவு வேகமாக ஓட்டியதே கிடையாது.ஏதோ பிரசவ வலியோடு இருக்கும் பெண்ணை மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்து செல்வது போல ஒரு படபடப்பு..எப்படியும் தேடி கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை கலந்த பயத்தோடு பயணத்தின் வேகத்தை அதிகமாக்கினேன் .
அரை மணி நேரத்திற்கு முன்பு ......
நான் வேலை செய்யும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் வீட்டிற்கு சிறிது நேரத்தோடு சென்றேன் .களைப்போடு எனது படுக்கையில் சாய்ந்து நிம்மதி பெருமூச்சி விட்டுக் கொண்டிருந்தேன் .களைப்பில் கண் எதிரே கிடந்த பொருட்கள் அதன் காட்சியில் சேரவில்லை.பல நிமிடங்கள் கடந்து எழுந்து அமர்ந்தேன் .இதயமே வெடித்தது போல ஓர் அதிர்ச்சி.
குருவிகள் இல்லாத கூடு சிதறி கிடந்தது போல பெட்டி திறந்து கிடந்தது.ஒரு பயத்தோடு தேட ஆரம்பித்தேன்.நான் தேடியது கிடைக்கவில்லை .
“அம்மா எங்கே இதிலிருந்த பழைய துணிகள்"என்று பெருங்கூச்சலிட்டேன் ஒரு அனாதை இல்ல குழந்தைகளுக்கு கொடுத்து விட்டேன் என்று மன நிறைவோடு சொன்னாள்.
"அந்த சிவப்பு சட்டை"என்றேன்.
உடனே அம்மா " கொடுக்கவே மனமில்லை.அழகாய் இருந்தது ஆனாலும் கொடுத்து விட்டேன்" என்று பதிலளித்தார்.கோபத்தை வெளிக்காட்டவும் முடியவில்லை.சோகத்தை வெளிகட்டாமளிருக்கவும் முடியவில்லை.கண்ணீர் குபு குபுவென கொட்டியது.அம்மாவிற்கு காரணம் புரியவில்லை.பிள்ளை அழுவதை பார்த்து எந்த தாய் வருத்தப்படாமல் இருப்பாள்.அவரும் அழுதுகொண்டே விசாரித்தார்.
வார்த்தைகள் கண்ணீராக வந்து கொண்டிருந்தது.மேசை மீது இருந்த அந்த அனாதை இல்ல நோட்டீஸ் என் கண்ணில் பட்டது.விரைவாக அந்த இடத்தை நோக்கி காரில் விரைந்தேன்.அரைமணி நேரமாக எதை எதையோ யோசித்து கொண்டிருந்தேன் . ஆனால் என் குறிக்கோள் "அந்த சிவப்புச் சட்டை"மேலேயே இருந்தது.அந்த அனாதை இல்ல வண்டி அந்த இல்லத்தை அடைவதற்கு முன்னால் பிடிக்க வேண்டும்.ஏனென்றால் அதில் தான் எல்லா துணிகளும் இருந்தது .தீடிரென என் வண்டியில் ஏதோ கோளாறு.வண்டியும் நின்று விட்டது.அருகில் இருந்தவரின் உதவியோடு ஒரு மெக்கானிக்கை வரசொன்னேன்.அவரும் வந்து பழுது பார்த்து கொண்டிருந்தார்.மனசே சரியில்லாமல் அங்கிருந்த ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன்.பழைய நினைவுகள் என்னை புரட்டிப் போட்டன .
என்ன'அந்த சிவப்புச் சட்டை"?
எத்தனையோ பேர் வாழ்க்கையில் அதிகமாக பாதிக்கற விஷயம் நட்பும் ,காதலும் தான்.நட்பே எனக்கு அதிகமாக இருந்ததால் எனக்கு காதலை பற்றிய அனுபவமில்லை .
அந்த நட்பு வேறெங்கும் எனக்கு கிடைக்கவில்லை அவனிடம் தவிர .....
'செந்தில் "
என் நண்பன் . . . .
அவன்,அவனோட நட்பு இந்த இரண்டு மட்டுமே கல்லூரியில் எனக்கு பரிட்சியமான விஷயங்கள்.
ஆரம்ப காலத்தில் எனக்கும்,அவனுக்கும் அந்த அளவுக்கு பழக்கமில்லை .காரணம் வசதின்னு கூட சொல்லலாம்.நான் கொஞ்சம் வசதியான குடும்பம்.எனக்கு படிப்பே பிடிக்கல ஆனால் என் அப்பா என்னை கட்டாயப்படுத்தி ஒரு சாதாரணமான கல்லூரியில் என்னைச் சேர்த்தார்.
அவன் அப்பா ஒரு நெசவுத் தொழிலாளி.ஒரே ஒரு இயந்திரத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக துணியை உற்பத்தி பண்ணி விற்று வாழ்கையை நடத்தி வந்தார்.செந்திலும் நானும் ஒரே வகுப்பு.நாட்கள் போகப் போக இருவரும் பழக ஆரம்பித்தோம்.எனக்கு நட்பின் அர்த்தத்தை சொன்னவன் அவன் தான்.வாழ்கையை வாழ கற்றுக் கொடுத்தான்.எனக்கு மிகவும் அவனை பிடித்து இருந்தது.
கல்லூரியில் அவனுக்கு இரண்டாவது பிறந்த நாள்.வழக்கம் போல அவனுக்கு விலை உயர்ந்த சட்டையை வாங்கி கொடுத்தேன்.பதிலுக்கு அவனிடம் எனக்கு என்ன வாங்கி கொடுப்பாய் என்று முதன் முறையாக கேட்டேன்.பதிலுக்கு அவன் என் அடுத்த பிறந்த நாளில் வாங்கி தருவதாக சொன்னான்.
நாட்களுக்கு கால்கள் மட்டுமல்ல சிறகுகளும் முளைத்து பறந்தது.என் பிறந்த நாளும் நெருங்கி கொண்டிருந்தது.செந்தில் என்ன பரிசு தருவான் என்ற ஆவலும் அதிகமாய் இருந்தது.அதனால் கடந்த ஒரு வாரமாக அவன் கல்லூரிக்கு வரவில்லை. அவன் வீட்டிற்கு சென்றேன்.நான் செல்வது அது தான் முதல் முறை.ஆவலாய் சென்ற எனக்கு அதிர்ச்சியும் எனக்காக ஆவலாய் காத்துக் கொண்டிருந்தது .
தோள் கொடுத்த தோழனை மாலைகள் எழவிடாமல் அழுத்தி கொண்டிருந்தது.எல்லாருடைய அழுகுரலும் அவன் காதுகளுக்கு கேட்கவில்லை .
அவன் உயிரை விட்டு விட்டான் .
"மண்ணிலும் ,என்னிலும் "
ஆறுதல் சொல்லவும் ஆளில்லை.அணைத்து அழவும் அங்கு எனக்கு யாருமில்லை. நானும் பிணமாய் தான் நின்று கொண்டிருந்தேன் .
விசாரித்த போது தான் தெரிந்தது ...
அவன் சாவிற்கு காரணம்
"அந்த சிவப்புச் சட்டை "
ஒரு வாரமாய் தன் கையால் நெய்த சட்டைதுணியை தையர்காரனிடம் தைத்து
கொண்டு வரும் வழியில் ஒரு வேன் மோதி இறந்து விட்டானாம்.
ஏதோ நானே கொலை செய்த மாதிரி ஓர் குற்ற உணர்வு.ஆயிரம் கத்தி குத்துகள் என் இதயத்தில்.சோகத்தை வெளிகாட்டாமல் யாருக்கும் தெரியாமல்
“அந்த சிவப்புச் சட்டையை” திருடி வந்து விட்டேன்.
அன்று முதல் இன்று வரை என்னிடமிருந்தது “அந்த சிவப்புச் சட்டை’யும் அவன் நினைவுகளும் மட்டுமே . . .
"சார் ! கார் ரெடி.மெக்கானிக் கூப்பிட்டார் . ..
"அந்த சிவப்பு சட்டை' யை தேடி
கண்களில் இருந்த துளிகளை துடைத்துக் கொண்டு காரை மறுபடியும் அனாதை இல்லத்தை நோக்கிச் செலுத்தினேன்.இறுதியாக அந்த இடத்தையும் அடைந்தேன் அங்கு விசாரித்ததில் இன்னும் அந்த வண்டி வரவில்லை என்று தெரிய வந்தது.
அந்த வண்டிக்காக நான் காத்திருந்தேன்.அங்கே ஏராளமான ஊனமுற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பார்க்கவே பரிதாபமாக இருந்தது.பாதி குழைந்தைகள் மேல்சட்டை,பாதி குழைந்தைகள் கால் சட்டை மட்டுமே அணிந்திருந்தார்கள்.இருந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு
"அந்த சிவப்புச் சட்டை“ க்காக காத்துக்கொண்டிருந்தேன்.
வண்டி வந்து நின்றது .துணிகளை கொட்டினார்கள்.நான் எழுந்திருப்பதற்குள் மொத்த குழந்தைகளும் ஆளுக்கொன்றாய் சண்டையிட்டுக்கொண்டு எடுத்தார்கள்.நான் அந்த விடுதி காவலரிடம் சொல்லி அந்த சட்டையை தேடி தருமாறு கேட்டேன்.
சிறிது நேரத்திற்கு பிறகு அந்த காவலர் ஒரு சிறுவனை கூட்டி வந்தார்.அவன் அணிந்திருப்பது “அந்த சிவப்பு சட்டையா? 'என்று கேட்டார்.
மனசு கேட்காமல் ஆம் என்றேன்.
காவலர் அந்த சிறுவனை கழற்றி தருமாறு சொன்னார்.அந்த சிறுவனும் ஏக்கத்தோடு கழற்றி கொடுத்தான் .அந்த சிறுவன் ஆடையின்றி வெறும் உடலாய் நின்றான்.
இதயம் முழுதும் குற்ற உணர்வோடு நான் இந்த செயலை செய்து கொண்டிருந்தேன்
மெதுவாய் குனிந்து அந்த சிறுவனிடம் ,
"தம்பி !உனக்கு நான் புதுச் சட்டை வாங்கித் தருகிறேன் ' என்றேன் .
அவனும் மெதுவாய் சந்தேகத்தோடு தலையாட்டினான்.மறுபடியும் உன் பெயர் என்ன என்று கேட்டேன் ..
'செந்தில் " என்றான் .
எனக்கு உடனே செருப்பால் அடித்தது போல் இருந்தது.
கண்கள் கலங்கியது .சட்டையை மறுபடியும் அந்த சிறுவனுக்கே கொடுத்தேன் ..
முழுமையான மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினேன்.அடுத்த மாதத்திலிருந்து என் சம்பளத்தில் ஒரு பகுதியை அனாதை இல்லத்திற்கு கொடுக்க முடிவு செய்தேன்.
'நண்பன் சாகும் போது
கொடுத்தான்
நட்பு சாகாமலிருக்க
கொடுத்தான்
"அந்த சிவப்புச் சட்டை "
இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருந்தது அனாதை இல்லத்தில் .
அரை மணி நேரத்திற்கு முன்பு ......
நான் வேலை செய்யும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் வீட்டிற்கு சிறிது நேரத்தோடு சென்றேன் .களைப்போடு எனது படுக்கையில் சாய்ந்து நிம்மதி பெருமூச்சி விட்டுக் கொண்டிருந்தேன் .களைப்பில் கண் எதிரே கிடந்த பொருட்கள் அதன் காட்சியில் சேரவில்லை.பல நிமிடங்கள் கடந்து எழுந்து அமர்ந்தேன் .இதயமே வெடித்தது போல ஓர் அதிர்ச்சி.
குருவிகள் இல்லாத கூடு சிதறி கிடந்தது போல பெட்டி திறந்து கிடந்தது.ஒரு பயத்தோடு தேட ஆரம்பித்தேன்.நான் தேடியது கிடைக்கவில்லை .
“அம்மா எங்கே இதிலிருந்த பழைய துணிகள்"என்று பெருங்கூச்சலிட்டேன் ஒரு அனாதை இல்ல குழந்தைகளுக்கு கொடுத்து விட்டேன் என்று மன நிறைவோடு சொன்னாள்.
"அந்த சிவப்பு சட்டை"என்றேன்.
உடனே அம்மா " கொடுக்கவே மனமில்லை.அழகாய் இருந்தது ஆனாலும் கொடுத்து விட்டேன்" என்று பதிலளித்தார்.கோபத்தை வெளிக்காட்டவும் முடியவில்லை.சோகத்தை வெளிகட்டாமளிருக்கவும் முடியவில்லை.கண்ணீர் குபு குபுவென கொட்டியது.அம்மாவிற்கு காரணம் புரியவில்லை.பிள்ளை அழுவதை பார்த்து எந்த தாய் வருத்தப்படாமல் இருப்பாள்.அவரும் அழுதுகொண்டே விசாரித்தார்.
வார்த்தைகள் கண்ணீராக வந்து கொண்டிருந்தது.மேசை மீது இருந்த அந்த அனாதை இல்ல நோட்டீஸ் என் கண்ணில் பட்டது.விரைவாக அந்த இடத்தை நோக்கி காரில் விரைந்தேன்.அரைமணி நேரமாக எதை எதையோ யோசித்து கொண்டிருந்தேன் . ஆனால் என் குறிக்கோள் "அந்த சிவப்புச் சட்டை"மேலேயே இருந்தது.அந்த அனாதை இல்ல வண்டி அந்த இல்லத்தை அடைவதற்கு முன்னால் பிடிக்க வேண்டும்.ஏனென்றால் அதில் தான் எல்லா துணிகளும் இருந்தது .தீடிரென என் வண்டியில் ஏதோ கோளாறு.வண்டியும் நின்று விட்டது.அருகில் இருந்தவரின் உதவியோடு ஒரு மெக்கானிக்கை வரசொன்னேன்.அவரும் வந்து பழுது பார்த்து கொண்டிருந்தார்.மனசே சரியில்லாமல் அங்கிருந்த ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன்.பழைய நினைவுகள் என்னை புரட்டிப் போட்டன .
என்ன'அந்த சிவப்புச் சட்டை"?
எத்தனையோ பேர் வாழ்க்கையில் அதிகமாக பாதிக்கற விஷயம் நட்பும் ,காதலும் தான்.நட்பே எனக்கு அதிகமாக இருந்ததால் எனக்கு காதலை பற்றிய அனுபவமில்லை .
அந்த நட்பு வேறெங்கும் எனக்கு கிடைக்கவில்லை அவனிடம் தவிர .....
'செந்தில் "
என் நண்பன் . . . .
அவன்,அவனோட நட்பு இந்த இரண்டு மட்டுமே கல்லூரியில் எனக்கு பரிட்சியமான விஷயங்கள்.
ஆரம்ப காலத்தில் எனக்கும்,அவனுக்கும் அந்த அளவுக்கு பழக்கமில்லை .காரணம் வசதின்னு கூட சொல்லலாம்.நான் கொஞ்சம் வசதியான குடும்பம்.எனக்கு படிப்பே பிடிக்கல ஆனால் என் அப்பா என்னை கட்டாயப்படுத்தி ஒரு சாதாரணமான கல்லூரியில் என்னைச் சேர்த்தார்.
அவன் அப்பா ஒரு நெசவுத் தொழிலாளி.ஒரே ஒரு இயந்திரத்தை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக துணியை உற்பத்தி பண்ணி விற்று வாழ்கையை நடத்தி வந்தார்.செந்திலும் நானும் ஒரே வகுப்பு.நாட்கள் போகப் போக இருவரும் பழக ஆரம்பித்தோம்.எனக்கு நட்பின் அர்த்தத்தை சொன்னவன் அவன் தான்.வாழ்கையை வாழ கற்றுக் கொடுத்தான்.எனக்கு மிகவும் அவனை பிடித்து இருந்தது.
கல்லூரியில் அவனுக்கு இரண்டாவது பிறந்த நாள்.வழக்கம் போல அவனுக்கு விலை உயர்ந்த சட்டையை வாங்கி கொடுத்தேன்.பதிலுக்கு அவனிடம் எனக்கு என்ன வாங்கி கொடுப்பாய் என்று முதன் முறையாக கேட்டேன்.பதிலுக்கு அவன் என் அடுத்த பிறந்த நாளில் வாங்கி தருவதாக சொன்னான்.
நாட்களுக்கு கால்கள் மட்டுமல்ல சிறகுகளும் முளைத்து பறந்தது.என் பிறந்த நாளும் நெருங்கி கொண்டிருந்தது.செந்தில் என்ன பரிசு தருவான் என்ற ஆவலும் அதிகமாய் இருந்தது.அதனால் கடந்த ஒரு வாரமாக அவன் கல்லூரிக்கு வரவில்லை. அவன் வீட்டிற்கு சென்றேன்.நான் செல்வது அது தான் முதல் முறை.ஆவலாய் சென்ற எனக்கு அதிர்ச்சியும் எனக்காக ஆவலாய் காத்துக் கொண்டிருந்தது .
தோள் கொடுத்த தோழனை மாலைகள் எழவிடாமல் அழுத்தி கொண்டிருந்தது.எல்லாருடைய அழுகுரலும் அவன் காதுகளுக்கு கேட்கவில்லை .
அவன் உயிரை விட்டு விட்டான் .
"மண்ணிலும் ,என்னிலும் "
ஆறுதல் சொல்லவும் ஆளில்லை.அணைத்து அழவும் அங்கு எனக்கு யாருமில்லை. நானும் பிணமாய் தான் நின்று கொண்டிருந்தேன் .
விசாரித்த போது தான் தெரிந்தது ...
அவன் சாவிற்கு காரணம்
"அந்த சிவப்புச் சட்டை "
ஒரு வாரமாய் தன் கையால் நெய்த சட்டைதுணியை தையர்காரனிடம் தைத்து
கொண்டு வரும் வழியில் ஒரு வேன் மோதி இறந்து விட்டானாம்.
ஏதோ நானே கொலை செய்த மாதிரி ஓர் குற்ற உணர்வு.ஆயிரம் கத்தி குத்துகள் என் இதயத்தில்.சோகத்தை வெளிகாட்டாமல் யாருக்கும் தெரியாமல்
“அந்த சிவப்புச் சட்டையை” திருடி வந்து விட்டேன்.
அன்று முதல் இன்று வரை என்னிடமிருந்தது “அந்த சிவப்புச் சட்டை’யும் அவன் நினைவுகளும் மட்டுமே . . .
"சார் ! கார் ரெடி.மெக்கானிக் கூப்பிட்டார் . ..
"அந்த சிவப்பு சட்டை' யை தேடி
கண்களில் இருந்த துளிகளை துடைத்துக் கொண்டு காரை மறுபடியும் அனாதை இல்லத்தை நோக்கிச் செலுத்தினேன்.இறுதியாக அந்த இடத்தையும் அடைந்தேன் அங்கு விசாரித்ததில் இன்னும் அந்த வண்டி வரவில்லை என்று தெரிய வந்தது.
அந்த வண்டிக்காக நான் காத்திருந்தேன்.அங்கே ஏராளமான ஊனமுற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.பார்க்கவே பரிதாபமாக இருந்தது.பாதி குழைந்தைகள் மேல்சட்டை,பாதி குழைந்தைகள் கால் சட்டை மட்டுமே அணிந்திருந்தார்கள்.இருந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு
"அந்த சிவப்புச் சட்டை“ க்காக காத்துக்கொண்டிருந்தேன்.
வண்டி வந்து நின்றது .துணிகளை கொட்டினார்கள்.நான் எழுந்திருப்பதற்குள் மொத்த குழந்தைகளும் ஆளுக்கொன்றாய் சண்டையிட்டுக்கொண்டு எடுத்தார்கள்.நான் அந்த விடுதி காவலரிடம் சொல்லி அந்த சட்டையை தேடி தருமாறு கேட்டேன்.
சிறிது நேரத்திற்கு பிறகு அந்த காவலர் ஒரு சிறுவனை கூட்டி வந்தார்.அவன் அணிந்திருப்பது “அந்த சிவப்பு சட்டையா? 'என்று கேட்டார்.
மனசு கேட்காமல் ஆம் என்றேன்.
காவலர் அந்த சிறுவனை கழற்றி தருமாறு சொன்னார்.அந்த சிறுவனும் ஏக்கத்தோடு கழற்றி கொடுத்தான் .அந்த சிறுவன் ஆடையின்றி வெறும் உடலாய் நின்றான்.
இதயம் முழுதும் குற்ற உணர்வோடு நான் இந்த செயலை செய்து கொண்டிருந்தேன்
மெதுவாய் குனிந்து அந்த சிறுவனிடம் ,
"தம்பி !உனக்கு நான் புதுச் சட்டை வாங்கித் தருகிறேன் ' என்றேன் .
அவனும் மெதுவாய் சந்தேகத்தோடு தலையாட்டினான்.மறுபடியும் உன் பெயர் என்ன என்று கேட்டேன் ..
'செந்தில் " என்றான் .
எனக்கு உடனே செருப்பால் அடித்தது போல் இருந்தது.
கண்கள் கலங்கியது .சட்டையை மறுபடியும் அந்த சிறுவனுக்கே கொடுத்தேன் ..
முழுமையான மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினேன்.அடுத்த மாதத்திலிருந்து என் சம்பளத்தில் ஒரு பகுதியை அனாதை இல்லத்திற்கு கொடுக்க முடிவு செய்தேன்.
'நண்பன் சாகும் போது
கொடுத்தான்
நட்பு சாகாமலிருக்க
கொடுத்தான்
"அந்த சிவப்புச் சட்டை "
இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருந்தது அனாதை இல்லத்தில் .
Subscribe to:
Posts (Atom)