Saturday, October 15, 2011

உனக்கும் ஒன்று . . .

ஓடும் பேருந்தில்
ஒளிய வந்த தென்றல் நீ !!!!
உன்னோடு பயணிப்பதில்
உள்ளம் எங்கும் உற்சாகம் . . .

அன்பும் மாறும்
அதன் அர்த்தங்களும் மாறும்
அத்தனையும் மாறாமல்
நம்முளே பூத்துக்கிடக்கிறது
நட்பு . . .

எண்ணங்களில் ஏதும் இல்லை
எதிர்பார்ப்பும் ஏதும் இல்லை
எதற்காக பயம்
என் கை பிடித்து நட
நட்பின் ஆழம் காட்டுகிறேன் . . .

வெயில் மழை புயல் வெள்ளம்
இவையெல்லாம் மிகையாகும்
உன் நட்பை விட்டு
நான் திசை மாறினால் . . . . .

வாழ்க்கை வேறாகும்
நம் துணையால்
நாம் தூரம் போகலாம்
நட்பை தொலைக்காதே
பொருளற்று போகும்
அத்தனை அதிசயங்களும்
அழகான நட்பும் !!!!!

சருகுகள் விழுந்து
பூமியின் உறக்கம்
தொலைவதில்லை . . .
சாகும் வரை
தொடர்ந்தும்
சலனங்கள் கலப்படமில்லை . . .

அடங்காமல் அழுகை வரும்
அன்பு அதிகமானால் !!!!
எனக்கும் வந்தது
அழுகையும் கவிதையும் !!!

Sunday, August 14, 2011

ஆட்சி மாறினால். . . .

ஆட்சி மாறினால். . . .
கைதியாய் இருந்தவன்
கைது செய்வான் ...
கைது செய்தவன்
கைதியாய் ஆவான் ...

மக்களின் கோரிக்கையும்
தலைவனின் தேர்தல் அறிக்கையும்
எப்படியோ இறக்கைகள்
பொருத்தப்பட்டு வானில்
பறந்து கொண்டிருக்கும் . . .

எங்களிடம் இருந்த
ஒரே ஆயுதம் வாக்குரிமை
எங்களை அறியாமலே
எங்கள் கழுத்தில் குத்திக்கொண்டிருக்கும்

ஆட்சிக்கு வந்தவனின்
அலமாரி திறக்கும்
ஆண்டு முடித்தவனின்
அலமாரி மாட்டிகொண்டு
முழிக்கும் . . .

ஏய் அரசியலே !!!!!!!
எங்களுக்கும் எகிப்துக்கும்
எவ்வளவு தூரம் !!!
புரட்சிக்கு முன்
எச்சரிக்கை !!!
சுதந்திரம்
மறுபடியும் வேண்டும் !!!!!!
இவர்களிடமிருந்து

Wednesday, June 29, 2011

****உன்னைப் பற்றி உனக்காக நான் வரைந்தது******

இனிப்பாய் நீ பேச
சிதைந்த வீடும்
சர்க்கரை கூடு . .

மேகத்தின் அழகை
நீ திருடி விட்டாய் . . .
அதன் மிச்சங்கள் என்னவோ
சோகத்தில் கண்ணீர் விட்டு
மழையாகிறது . . .

உன்னை கோபமாய் பார்த்தாலும்
நீ பல முறை சிரிக்கும்
வரவேற்பறை பொம்மை . . .

உன் ஒருத்திக்காக
மட்டுமே உலகத்தவரை
சிறிது உயரம் குறைக்கலாம். . .
உனக்காக எனக்குள் தோன்றிய
புது யோசனை . .

உனக்கான தனித்திறமை என்ன ?
எதை சொன்னாலும் சிரிப்பதை தவிர . . . .

நீ அர்த்தங்களில்லாமல்
எது பேசினாலும்
அத்தனையும் கவிதை . . .
ஒரு வேளை நான்
செவிடனாய் பிறந்திருந்தால் !!!!!!!

தெளிவாய் நீ பேசினால்
தலை தெறிக்கும் தமிழிலக்கணம் ...

களவாடியவனும்
களவு போனவும்
சந்தோஷப்படுகிற ஒரு தருணம் இது. . .
புரியவில்லையா உனக்கு?
நீ என்னிடம் களவாடியதும்
நான் உன்னிடம் களவு போனதும்
சிநேகிதம்

உறவுகளை நேசி
உன் உலகம் பெரிதாகும்
உண்மையாய் நேசி
உறவுகள் உனதாகும். . .
என்றும் புன்னகையோடு இரு !!!!!!!

Saturday, May 14, 2011

திறந்த வீட்டில்
மட்டுமல்ல .....
பிறந்த வீட்டில்
நுழைந்தாலும் நாய் என்கிறார்கள் . . .
-வேலையில்லா பட்டதாரி

மறக்கவில்லை இன்னும் . . . .

அன்று . . .
மூளையின் சுவற்றில்
தொலைத்த
உன் முகம் ...
இன்று ..
முகப் புத்தகத்தின்
சுவற்றில் கிடைத்தது . . .
-சிறு வயது தோழி
நன்றி facebook