"சிறகுகளில்லா பறவை "
Tuesday, September 14, 2010
அனாதையின் வாழ்க்கைச் சுழற்சி
பசியை மறக்க
உணர்ச்சியை விற்றேன்
பணமானது . . . .
கொலையே கூடாதென
கலைக்க மறந்தேன்
கருவானது . . . .
உருவம் வந்தவுடன்
உலகில் உதறினேன்
அனாதையானது . . . .
தன்னைப் பற்றி தானே .....
விலை கொடுத்து வாங்க
என்னிடம் ஏதுமில்லை . . . .
அதனால் நானே விலையாகிறேன் . . . .
--விலைமாது
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)