இங்கு
பூவிதழ்கள் மழையில்
இரு இதயங்கள் சேரும் . . .
இரு கைகள் சேர்ந்து
கடலில் நீரை தேடும்...
கூச்சம் இனி
இவர்களிடம் கூச்சப்படும். .
மிச்சம் இல்லா
அன்பும் பகிரப்படும் ...
உனக்கும் எனக்கும் என்பது
நமக்காகும் . . .
உயிர் கூட இனி
ஒன்றாகும் ...
சாயந்து கிடக்க
அவளுக்கொரு தோளும். ..
செல்லமாய் தூங்க
அவனுக்கொரு மடியும்
இனி இலவசமாகும் ...
விடியல் திறக்கும் காலை
தினம் உங்கள் வாழ்கையை விளக்கும் ...
வாரக்கடைசி வரமாகும்
வாழ்த்துக்கள் சுகமான பாரமாகும் . . .
நாளுக்கு நாள்
உங்கள் அழகு கூடும் ..
உங்கள் அனுமதியின்றி
கண்ணாடி உங்களை தேடும் . . .
இனி உங்கள் வாழ்க்கை
அழகான கவிதை . .
உங்கள் சுவரெங்கும்
புன்னகை பதியட்டும் ...
அல்ல அல்ல
குறையாத அன்போடு
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
வாழ வாழ்த்துகிறோம் . . .