Monday, April 1, 2013

நீ அச்சு வார்த்த
உருவ பொம்மை.
உன் அழகை சொல்ல ஏன்
உருவகம் உவமை.

பூவை சூடிய பூ
உலகினில் இதுவரை இல்லை.
உனை சூடினால் அது
இனி பூவே இல்லை.

உன் முகமில்லா முகப்புத்தகம்
வரிகள் இல்லா வெறும் புத்தகம்.
பல கணக்கில் நண்பர்கள் இருந்தும்
உன் உற‌வில்லா அதில் என் கணக்கு தேவையில்லை.

நீ தூக்கி எறியும் எதற்கும்
மறுசுழற்சி இல்லை.
உன் கண்கள் தாக்கி எரியும் எதற்கும்
மறுமலர்ச்சி இல்லை.

Saturday, November 24, 2012

மழைத்துளி பெண்ணே!!!!!!


நான் கைகள் இல்லா
மேகம்...
நீ சிறகுகள்
இல்லா மழைத்துளி..
தவற விட்டேன்
உன்னை..
சிதறி விட்டாய்
பெண்ணே..
சிதறிய பெண்ணே
சீக்கிரம் வானம் வா..
நான் கரையும் முன்னே
ஒன்றாய் கலப்போம் வா..

கணப்பொழுதில்
அவள் முகம் காட்டி விட்டு
என் இரவெல்லாம்
கனவுகளை நிரப்பி விட்டாய்...
அங்கங்கே அவள் முகம்..
அத்தனையும் அவள் முகம்...
தங்கி விட்டு
செல்வாளா அவள்..
என் நான்கு அறைகளும் காலி
இதயத்தில்..
மின்விசிறிகள் தேவையில்லை
என் சுவாசமே போதும்
அவள் அங்கே உறங்க..
போலிகள் தான்
கவிதைகளாகின்றன...
அவளுக்காக நான்
ஒர் பெயர் வைத்தால்
அது கவிதையை
போலியாக்குவதாகும்..
             

Tuesday, August 21, 2012


மிட்டாய் பேச்சு
மின்மினி..
நீ மெதுவாய்
உடையும் வெண்பனி..

மேகம் பூசிய‌
முகம்!!!!!
நீ வாசம் மறந்து
பாசம் வீசும்
பூ!!!!!

நீ சிரிப்பை
விதைத்து நட்பை
பறிக்கும் விவசாயி..

நட்பை கடன் கொடுத்து
அளவில்லா அன்பை கேட்கும்
கந்து வட்டிக்காரி..

என் கிறுக்கலையும்
கிறுக்குதனங்களையும்
வண்ணம் கொடுத்து
பார்க்கும் என் ஒவியத்தோழி..

உன் அடம்
பிடிக்கும்
உன்னோடு புகைப்படம்
பிடிக்கும்..
நீ செய்யும்
கேலிகள் பிடிக்கும்.
உன் பற்களின்
வேலிகள் பிடிக்கும்.
உன் கோபத்தில்
சிரிக்கப் பிடிக்கும்..
மொத்தத்தில் உன்னைப்
பற்றி பேசும் பொய்கள்
பிடிக்கும்.

நீ எனக்காக‌
பேசுகிறாய்..
நான் ஊமையாகிறேன்..
நீ என்னோடு
ந்டக்கிறாய்..
நான் குருடனாகிறேன்..
இது என் நட்பை பற்றிய‌
ஆசைகள்..
உன் கையில் கொடுக்கிறேன்
முடிந்தால் நிறைவேற்று..

கண்ணீர் வேண்டாம்
மன்னிப்புகள் வேண்டாம்
நட்பென்று உருக்கம் வேண்டாம்.
நொடிகள் என்றாலும்
சிரிப்போடு கடப்போம்...
             ‍அன்பு நண்பன்.

Monday, June 4, 2012


இங்கு 
பூவிதழ்கள் மழையில்
இரு இதயங்கள் சேரும் . . .
இரு கைகள் சேர்ந்து 
கடலில் நீரை தேடும்...

கூச்சம் இனி 
இவர்களிடம் கூச்சப்படும். . 
மிச்சம் இல்லா
அன்பும் பகிரப்படும் ...

உனக்கும் எனக்கும் என்பது 
நமக்காகும் . . .
உயிர் கூட இனி 
ஒன்றாகும் ...

சாயந்து கிடக்க 
அவளுக்கொரு தோளும். .. 
செல்லமாய் தூங்க 
அவனுக்கொரு மடியும் 
இனி இலவசமாகும் ...

விடியல் திறக்கும் காலை 
தினம் உங்கள் வாழ்கையை விளக்கும் ...
வாரக்கடைசி வரமாகும் 
வாழ்த்துக்கள் சுகமான பாரமாகும் . . .

நாளுக்கு நாள் 
உங்கள் அழகு கூடும் ..
உங்கள் அனுமதியின்றி 
கண்ணாடி உங்களை தேடும் . . .

இனி உங்கள் வாழ்க்கை 
அழகான கவிதை . . 
உங்கள் சுவரெங்கும் 
புன்னகை பதியட்டும் ...

அல்ல அல்ல 
குறையாத அன்போடு 
ஆயிரமாயிரம் ஆண்டுகள் 
வாழ வாழ்த்துகிறோம் . . .




Friday, June 1, 2012


உனக்கென்ன  பரிசு 
உன்னை பற்றி சொல்வதை தவிர ....

உன் அன்பை அடித்து கொள்ள 
இங்கு யாருமில்லை. .. 
நீ என்னை அன்பாய் அடித்து கொள்ள 
தடையும் இல்லை ..
அன்புமணி ...

நீ பேச்சில் அத்து மீறும் 
அழகு நிறுவனம் . . .
உன் மீது வரைமுறையின்றி 
வழக்குகள் போடலாம். . .
பத்து நிமிடம் நீ பேசினால் 
அது பாட்டி கதைகளாகும்...
பட்டென்று நீ பேசினால் 
பல பாஷைகள் புதியதாய் பிறக்கும். . .
பேச்சியம்மா....

கொலைமிரட்டல் விடுகிறேன் 
குழந்தை போல சிரிக்கின்றாய். . .
அடி தடி,ஆரவாரம் என்கிறேன் 
அடுத்ததை சொல் என்கிறாய்...
இனி மேலாவது  என்னை பார்த்து பயப்படு. ...

புன்னகை பேசி பூவாய் 
பூக்கிறாய் அனுதினமும்  ...
உன் கை பேசி நீயே 
பேசி சாகிறது எல்லா கணமும் ..
செல்போன் சிட்டுக்குருவி...

உடைத்தாலும் உண்மையை 
காட்டும் கண்ணாடி . . 
ஆனால் நீ என்னிடம் உண்மையை மட்டும் 
உடைத்து விட்டு பிம்பம் 
காட்டிய முதல் பொய் பேசும் கண்ணாடி . . 

சோகம் என்றால் 
உன் இமைகளுக்கு தாகம் போலும் ..
சட்டென்று கண்ணீர் பாய்ச்சுவாய்...
அடுத்த முறை கண்ணீர் வேண்டாம் ...

உன் சிணுங்கலை கேட்டு தான் 
என் காதுகள் சிரிக்கவே கற்று கொண்டது . . .
சிணுங்கல் ராணி . . . .

வில்லங்கம் பிடித்த 
வியட்நாம் புகைப்படம் 
என் மானம் வெள்ளமாய் போன 
அங்காடி தெரு 
இவை தான் நமக்கு 
இருக்கும் சண்டை ஆயுதங்கள் . . .

எல்லா துன்பங்களும் 
தொலையட்டும் உன் வாழ்வில் 
எல்லா இன்பங்களும் 
கொட்டட்டும் உன் வாசலில் ...

உன் நண்பன் எழுதியது 
இதில் புழுதிகள் 
ஏதுமில்லை ..
இருந்தால் ஓரம் போடு
பிடித்தால் உன் இருதயத்தில் போடு ...

அன்பு நண்பனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் . . . .

Saturday, October 15, 2011

உனக்கும் ஒன்று . . .

ஓடும் பேருந்தில்
ஒளிய வந்த தென்றல் நீ !!!!
உன்னோடு பயணிப்பதில்
உள்ளம் எங்கும் உற்சாகம் . . .

அன்பும் மாறும்
அதன் அர்த்தங்களும் மாறும்
அத்தனையும் மாறாமல்
நம்முளே பூத்துக்கிடக்கிறது
நட்பு . . .

எண்ணங்களில் ஏதும் இல்லை
எதிர்பார்ப்பும் ஏதும் இல்லை
எதற்காக பயம்
என் கை பிடித்து நட
நட்பின் ஆழம் காட்டுகிறேன் . . .

வெயில் மழை புயல் வெள்ளம்
இவையெல்லாம் மிகையாகும்
உன் நட்பை விட்டு
நான் திசை மாறினால் . . . . .

வாழ்க்கை வேறாகும்
நம் துணையால்
நாம் தூரம் போகலாம்
நட்பை தொலைக்காதே
பொருளற்று போகும்
அத்தனை அதிசயங்களும்
அழகான நட்பும் !!!!!

சருகுகள் விழுந்து
பூமியின் உறக்கம்
தொலைவதில்லை . . .
சாகும் வரை
தொடர்ந்தும்
சலனங்கள் கலப்படமில்லை . . .

அடங்காமல் அழுகை வரும்
அன்பு அதிகமானால் !!!!
எனக்கும் வந்தது
அழுகையும் கவிதையும் !!!