Wednesday, March 18, 2009

தோழியே !

தோல் சாயும் தந்தையிடம்
கிடைக்காதது தோழமையிலும்
கிடைக்கலாம் . . .
ஆம் !
கிடைத்தது உன்னிடத்தில் . . .

உன் முதல் பார்வையிலே
எனக்கு ஒரு சந்தேகம்
முன் பிறவி சிநேகத்தின்
பிரதிபலிப்பு . . .

எதாவது எழுத வேண்டும்
உன்னைப் பற்றி . . .
இது என் இதயத்தின் வேண்டுகோள் . . .

அதிக நாள் பழக்கமும்
அரை நொடியில் தொலைந்து
போகலாம் . ..
ஆனால்
அரை நொடி நட்பும்
ஆயுள் வரை தொடரலாம் . . .
எனகென்னவோ
அப்படிதான் உன் நட்பும் !
ஆயுட்காலம் வரை . . .

இவ்வளவு நாள்
ஆண் பெண் நட்பில்
அதிகம் நம்பிக்கை இல்லை . . .
நம்புகிறேன் இன்று ? . .

நண்பன் அழும் போது
அவன் அழ
உன் கண்களை கொடுப்பதை விட
துடைக்க கைகளை கொடு . . .
சில நேரங்களில் அல்ல
பல நேரங்களில் உன் கைகளை
பார்த்திருக்கிறேன் . .

உன் தாய் ,தந்தை
கொடுத்த நட்பு சுதந்திரம்
நம்பிக்கையின் எவரெஸ்ட் . . .
தலை வணங்குகிறேன் . . .

பல சொந்தங்கள்
பல உறவுகள்
பதிக்கிறது உன் நட்பு
" நினைவுச் சின்னம் "

நட்பு கடலை விட
வானை விட
பெரியது என்பார்கள் . . .
நட்பு புனிதமானது
தெய்வீகமானது
என்பார்கள் . . .அப்படியா ?
இல்லை . .
ஒரு சின்ன
சந்தோஷமான உணர்வு
அடுத்தவர்களுக்காக
நாம் வாழும் வாழ்கை . . .
நீ இதை முழுமை செய்திருக்கலாம் ?

இந்த வரிகளை
நீ வாசிக்கும் போது
உன் இதழ்கள் புன்னகைக்கலாம் . . .
பரவாயில்லை .. .
அதுவும் எனக்கு
ஒரு சின்ன சந்தோஷம் தான் . . .

ஒரு சின்ன வேண்டுகோள் . .
நாட்கள்
வாரங்கள்
மாதங்கள்
வருடங்கள்
நட்புக்கு எல்லை விதிப்பதில்லை . . .
நண்பர்களால் மட்டுமே மறக்கபடுகிறது . . .
மறந்து விடாதே. . . !

மீண்டும் உன்னை போல்
ஒரு உண்மையான நட்பை தேடி . . . .


. . . .அன்பு நண்பன் . . .

No comments:

Post a Comment